கொழும்பில் மின் தூக்கியால் பறிபோன இளைஞன் உயிர்

கொழும்பில் மின் தூக்கியால் பறிபோன இளைஞன் உயிர்

 கொழும்பு - மொரட்டுவையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் எதிர்பாராத விதமாக லிஃப்ட் தண்டு செயலிழந்து கீழே விழுந்ததில் 19 வயது ஹோட்டல் ஊழியர் நேற்று (15)  உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது பணியில் இருந்த இளம் தொழிலாளி, ஹோட்டலின் மின்சார லிஃப்ட் அமைப்பு திடீரென செயலிழந்து கீழே விழுந்ததால் படுகாயமடைந்தார்.

கொழும்பில் மின் தூக்கியால் பறிபோன இளைஞன் உயிர் | Youth Dies Struck By Electric Lift Moratuwa Hotelகாயமடைந்த இளைஞன் பாணந்துறை அடிப்படை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.