தகறாரின் போது இளைஞன் செய்த கொடூர செயல் ; பரிதாபமாக பறிபோன உயிர்

தகறாரின் போது இளைஞன் செய்த கொடூர செயல் ; பரிதாபமாக பறிபோன உயிர்

மாரவில, கட்டுநேரிய புனித அந்தோனி மாவத்தையில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (2) மாலை இந்தப் சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகறாரின் போது இளைஞன் செய்த கொடூர செயல் ; பரிதாபமாக பறிபோன உயிர் | Youth S Cruel Act During Crash Kills Man

உயிரிழந்தவர் கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

தனிப்பட்ட முரண்பாடு ஒன்று தீவிரமடைந்ததால் இந்தப் தாக்குதல் நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலை தொடர்பாக 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.