சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன?

சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன?

  தாய்லாந்தில்   இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன? | Sri Lankan Tourist Hit Pattaya Gender Dispute

கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், திருநங்கையில் தாக்குதலில் இலங்கையர் காமயடைந்த நிலையில் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

54 வயதான இலங்கைருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுற்றுலா சென்ற இலங்கையருக்கு தர்ம அடிகொடுத்த திருநங்கை; நடந்தது என்ன? | Sri Lankan Tourist Hit Pattaya Gender Dispute

குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.

அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். இதன்போது தனது சேவைக் கட்டணத்தை திருநங்கை கூறி தொட அனுமதித்துள்ளார்.

ஒரு முறை நான் அவரைத் தொட அனுமதித்தேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, ​​எனக்கு கோபம் வந்ததால் இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநங்கை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.