2.05 மில்லியன் யூரோ நிதி உதவி
இலங்கைக்கு மேலதிகமாக 2.05 மில்லியன் யூரோ நிதி உதவியை வழங்குவதற்கு ஜேர்மனி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார தாக்கத்தில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது.
இலங்கைக்கும், ஜேர்மனிக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை கடந்த ஜுன் மாதம் 10 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய, 11 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026