
இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை
நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களில் மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக சுகாதாரத் தரவுகள் குறிப்பிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.