தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை

தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை

குருநாகல் மாவத்தகம, வெஉட பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர் பலத்த காயமடைந்து மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெஉட பகுதியை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகே ஒரு முதியவரை தாக்க ஒரு குழு கூடியபோது, ​​உயிரிழந்தவர் தனது மகனுடன் அதைத் தடுக்கச் சென்றுள்ளார்.

தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை | Man Attacked Killed In Sri Lanka

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, அந்தக் குழுவில் இருந்த பலர் தாக்குதல் நடத்தி காப்பாற்ற வந்தவரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மாவத்தகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை | Man Attacked Killed In Sri Lanka

சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.