விடத்தல் தீவு பாடசாலையில் வாக்களித்த செல்வம் அடைக்கலநாதன்

விடத்தல் தீவு பாடசாலையில் வாக்களித்த செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் இன்று மன்னாரில் வாக்களித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் விடத்தல் தீவு ஜோசப்வாஸ் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களித்துள்ளார்.