
கனடாவில் நாடுகடத்தப்படவிருந்த யாழ் குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி!
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை முயற்சி செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 40 வயதான குடும்பஸ்தர் உயிரை மாய்க்க முற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க்படப்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் இருந்த யாழ் குடும்பஸ்தர் மலசலகூடத்தை துப்பரவு செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் ஒன்றை அருந்தியதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் தற்கொலை க்கு முயன்ற நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் கள் கூறுகின்றன.
குறித்த குடும்பஸ்தர் நாளை இலங்கைக்கு நாடு கடத்த முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.