லெபனான் குண்டுவெடிப்பு – இலங்கை தூதரகத்திற்கு ஏற்பட்ட நிலை.

லெபனான் குண்டுவெடிப்பு – இலங்கை தூதரகத்திற்கு ஏற்பட்ட நிலை.

லெபனானின் தலைநகரான பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் குறித்த தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என லெபனானுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் இலங்கைத் தூதரகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.