தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்

தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்

முல்லைத்தீவு (Mullaitivu)  மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (04.03.2025) மாலை முல்லைத்தீவு - மாங்குளம், கற்குவாரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்டு சுகவீனமடைந்துள்ளது.

இதனையடுத்து, அந்த குழந்தை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளது.

தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம் | One And Half Year Old Baby Dies Consuming Pills

இந்நிலையில், குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.