
10 மணிவரை பதிவான வாக்குப்பதிவு- கொழும்பில் 27 சதவீதம் பதிவு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொது தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பொதுத் தேர்தலில் முற்பகல் 10.00 மணிவரை கொழும்பில் 27 சதவீத வாக்குகளும், களுத்துறையில் 20 சதவீத வாக்குகளும், மாத்தளையில் 25 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மாத்தறை 25 சதவீதம், கேகாலை 25 சதவீதம், திருகோணமலை 30 சதவீதம் மற்றும் இரத்தினபுரியில் 24 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.