லெபனான் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பதினருக்கு மோடி இரங்கல்!

லெபனான் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பதினருக்கு மோடி இரங்கல்!

லெபனான் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, “ பெய்ரூட் நகரத்தில் நடந்த மிகப்பெரிய வெடி விபத்து அதிக அளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம்” எனப்  பதிவிட்டுள்ளார்.