குழந்தையை பெற்று வெளியில் வீசியெரிந்த மாணவி: தமிழர் பகுதியில் சம்பவம்

குழந்தையை பெற்று வெளியில் வீசியெரிந்த மாணவி: தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று வெளியில் வீசிய சம்பவம் ஒன்று இன்று  (23) அதிகாலையில் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை  18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் மாணவி மலசல கூடத்திற்கு சென்று குழந்தையை பெற்று யன்னல் வழியாக  வெளியே வீசியுள்ளார்.

குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று நிலையில் மாணவி குழந்தையை பெற்று வெளியில் வீசியமை தெரியவந்துள்ளது.

குழந்தையை பெற்று வெளியில் வீசியெரிந்த மாணவி: தமிழர் பகுதியில் சம்பவம் | Student Who Threw Her Baby Outsideஇதையடுத்து, குழந்தை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.