கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதி கைது

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதி கைது

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான விசாக்களை பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடா செல்ல முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதி கைது | Couple Arrest In Katunayake Airport

கைது செய்யப்பட்ட கணவருக்கு 40 வயது எனவும் மனைவிக்கு 34 வயது எனவும் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.