![](https://yarlosai.com/storage/app/news/d5d5182306091a864e5e526336d2725c.jpg)
கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்
பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் மாணர்வகளை கடவுச்சீட்டு பெற அனுப்புவதால், அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.
அதன் காரணமாக குறித்த மாணவர்கள், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவ்வாறன சூழ்நிலைகளில் திணைக்கள அதிகாரிகள் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.