யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை

யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம்   யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (5) விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், புதிய கட்டிட தொகுதி ஒன்றை அமைக்கப்பட வேண்டும்,

யாழ் போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை | Jaffna Teaching Hospital Faces Staff Shortage

வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி கூறினார்.

அத்துடன் வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், நோயாளர்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சிகிச்சை வழங்குவதற்கும், தேவையான மனிதவள ஆதாரங்களை முழுமையாக வழங்குவது அவசியமாகும் எனவும் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி எடுத்துக்கூறினார் .

எனவே உரிய அதிகாரிகள் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.