பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை; தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை; தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை; தென்னிலங்கையில் அதிர்ச்சி சம்பவம் | Woman Strangled To Death Shock In South Sri Lankaஉயிரிழந்த பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கணவர் வீடு திரும்பி மனைவியைச் தேடிய போது, ​​அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனினு இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.