யாழில் வீடொன்றில் பல்கலைக்கழக மாணவியுடன் சிக்கிய மூவர்; அதிர்ந்துபோன அயலவர்கள்!
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தென்னிலங்கை மாணவி ஒருவர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 3 காவாலிகளுடன் நிர்வாண நிலையில் அகப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பல்கலைக்கழகத்திலிருந்து ஓரிரு கிலோ மீற்றர் துாரத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டின் பாதுகாப்புக்கு என ஒருவனை குறித்த குடும்பஸ்தர் தங்க வைத்திருந்துள்ளார்.
பல தடவைகள் இரவில் அந்த வீட்டில் ஆட்டோவில் பலர் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந் நிலையில் சம்பவம் இடம்பெற்ற அன்று இரவு தென்னிலங்கை பெண் அந்த வீட்டிலிருந்து கூக்குரல் இட்ட சத்தம் கேட்டதால் சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டு மதில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்த போது நிர்வாண நிலையில் பெண் ஒருவரும் 3 ஆண்களும் காணப்பட்டுள்ளனர். அப் பெண் சிங்கள யுவதி எனவும் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவி எனவும் தெரியவந்துள்ளது.
வீட்டுக்குள் அயலவர்கள் புகுந்தவுடன் இரு ஆண்கள் இருவரும் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது. தப்பியோடிய ஒருவர் தென்னிலங்கையர் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டு மேற்பார்வைக்கென தங்க வைக்கப்பட்டிருந்தவனே அவர்களிடம் பணத்தை வாங்கிய பின் வீட்டை கொடுத்துள்ளதாக அயலவர்கள் அறிந்துள்ளார்கள்.
இதனையடுத்து அயலவர்கள் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரான புலம்பெயர் தமிழருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர் கெஞ்சிக் கேட்டதால் பிடிபட்டவர்களை பொலிசாரிடம் ஒப்படைக்காது விட்டதாக வும் கூறப்படுகின்றது.
அதேவேளை குறித்த வீட்டு ஹோலில் பாவித்த மதுபாண போத்தலும் இறைச்சிப் பொரியல்கள் மற்றும் கொத்துறொட்டி பார்சல்கள், சிகரெட் போன்றனவும் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.