அரச - தனியார் துறை சம்பள அதிகரிப்பு: அநுரவிற்கு கடும் அழுத்தம்

அரச - தனியார் துறை சம்பள அதிகரிப்பு: அநுரவிற்கு கடும் அழுத்தம்

தனியார் துறையிலும் அரச சேவையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பேச்சுக்கள் நன்றாக இருந்தாலும் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றதாகவும் அதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், போச்சுக்களை போன்ற புதிய ஏற்பாடுகள் இந்த அரசிடம் இல்லை என்றும் பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச - தனியார் துறை சம்பள அதிகரிப்பு: அநுரவிற்கு கடும் அழுத்தம் | Salary Increase In Govt Sector And Private Sectorஅத்தோடு, மின்சார கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்துக்கு சுமையாக மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், உர மானியத்தை கூட முறையாக வழங்க முடியாத அரசு, பரிசோதனைகள் இன்றி 328 கொள்கலன்களை சிவப்பு அறிவிப்புடன் விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரச - தனியார் துறை சம்பள அதிகரிப்பு: அநுரவிற்கு கடும் அழுத்தம் | Salary Increase In Govt Sector And Private Sectorஇந்த நிலையில், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவல் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தியுள்ளார்.