இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் சிறுவர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றதாகவும் அந்த சபை கூறியுள்ளது.

இதன்படி, கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | 321 Cases Of Child Sexual Abuse Last Year  சிறுவர்கள் மீதான கடுமையான, தவறான நடத்தை சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தவறான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலகட்டத்தில், வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.

தவறான நடத்தை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், தவறான செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | 321 Cases Of Child Sexual Abuse Last Yearஇதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் தவறான புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

2024 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.