இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

182,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 42,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு | Auction Sale Of Treasury Bills Cbsl

மேலும், 364 நாட்களில் முதிர்வடையும் 80,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும் உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.