லங்காபுரியில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா

லங்காபுரியில் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா

பொலன்னறுவை- லங்காபுர பிரதேச செயலகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கும் அவரின் மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்  கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஐந்து வயது மகள், விசேட பிரிவில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் லங்காபுர பிரதேச செயலகத்தில் மாத்திரம் 12 பேர் கொரொனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பினை பேணிய 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் பொலன்னறுவையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.