ஏலத்திற்கு வருகிறது அரச சொகுசு வாகனங்கள் : பறந்தது உத்தரவு

ஏலத்திற்கு வருகிறது அரச சொகுசு வாகனங்கள் : பறந்தது உத்தரவு

அரச வர்த்தக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள V8 உட்பட அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்களங்களும் சொகுசு வாகனங்களின் அதிக இன்ஜின் திறன் மற்றும் வருமான விவர அறிக்கையை வரும் மார்ச் 1ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

1800சிசிக்கு மேல் உள்ள எஞ்சின் திறன் கொண்ட ரோந்து வாகனங்கள் மற்றும் 2300சிசிக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட டீசல் வாகனங்கள் (இரட்டை வண்டி, ஒற்றை வண்டி,வான், பேருந்து, பாரவூர்திகள் போன்றவை தவிர) சுங்க ஆணை (அ) அட்டவணையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வகைப்பாடு தலைப்பு (எச்எஸ்) 87.03 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளவை இவ்வாறு ஏலம் விடப்படும்.

ஏலத்திற்கு வருகிறது அரச சொகுசு வாகனங்கள் : பறந்தது உத்தரவு | Orders For Auction Of Luxury Vehiclesஇவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்களை எந்த அரசு நிறுவனமும் வாங்கக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் முறைகேடு மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கும், அரசாங்கத்தின் வினைத்திறனான பயன்பாட்டினை உறுதி செய்வதற்கும் அனைத்து அரசாங்க வாகனங்களையும் ஆவணப்படுத்துதல், பராமரித்தல் மற்றும் முறையான பயன்பாட்டிற்கு அறிக்கை செய்வது அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் கட்டாயப் பொறுப்பாகும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனங்களின் தேவைகளை மதிப்பிட்டு, நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரி, பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யாத மற்றும் நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு தேவையில்லாத மோட்டார் வாகனங்களை அரசாங்க கொள்முதல் முறையின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

ஏலத்திற்கு வருகிறது அரச சொகுசு வாகனங்கள் : பறந்தது உத்தரவு | Orders For Auction Of Luxury Vehiclesமற்றும் மேலே குறிப்பிட்ட மோட்டார் வாகனங்கள் தேவைப்பட்டால். நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக, தேவையை நியாயப்படுத்தும் திறைசேரி செயலாளரின் ஒப்புதலைப் பெறுவதற்கு, கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகத்திற்கு ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.