தேர்தல் கடமைக்குச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம்!

தேர்தல் கடமைக்குச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம்!

நாடாளுமன்ற தேர்தலுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் உத்தியோகத்தர்களை வவுனியா மாவட்ட செயலகம் அசெளகரியத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் இருந்த போதிலும் மாவட்ட செயலகத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் உள்ள காமினி மாகாவித்தியாலய மைதானத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்திவிட்டு வருமாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முன்கூட்டியே குறித்த தகவல் வழங்கப்படாமையினால் கடமைக்கு சமூகமளித்த உத்தியோகத்தர்கள் பெரும் அசெளகரியத்திற்கு உள்ளாகியிருந்தனர்.