வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள்

வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள்

நாளை  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்கு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதேநேரம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன.

அவற்றில் 7 ஆயிரத்து 452  வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அத்துடன் குறித்த பொதுத்தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்பட்டு வாக்களிப்பு நடிவடிக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

 அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும், தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.