நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா வைரஸ்
நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்து 4 பேருக்கும் லங்காபுரவில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்பில் இருந்த மேலும் ஒருவருக்கும்
நேற்று கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 828 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 3 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 517 பேர் குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்; சிகிச்சை பெற்று வருகின்றனர்.