நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை! | Danger Warning For 4 Districts Land Slide Srilankaஅதேவேளை , எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, அங்கிருந்து 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்காலிகமாக பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.