வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இந்த வருடத்தின் நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) வெளியிட்டுள்ளது.

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கிற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய வரியை தொடர்ந்து செலுத்தாமல் தவறியிருந்தால், அதை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு வரி வகைக்கு அமைவாக செலுத்த வேண்டிய சுயமதிப்பீட்டு வரி, நிலுவை வரி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டு வரியை டிசம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அதற்கான அபராத நிவாரணத்தை பெற முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரி மற்றும் வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின்படி கள ஆய்வுப் பணிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் | Ird Sets Deadlines For Defaulted Tax Payments

வரி செலுத்துவோர் தங்களின் நிலுவைத் தொகையை உடனடியாகத் தீர்ப்பதன் மூலம் தங்கள் இணக்கத்தை உறுதிசெய்து தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து உதவி அல்லது மேலதிக தகவல்களுக்கு, தனிநபர்கள் உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.