நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

 வளிமண்டலவியல் திணைக்களத்தின்(department of meterology) தகவலின்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளது.

நாளைய தினத்திற்கான (29) வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போதே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இது நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடமேற்கு நோக்கி மிக மெதுவாக நகர்ந்து மேலும் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது

நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் நாளைய தினத்திற்கு பின்னர் படிப்படியாகக் குறையும் என்று நம்பப்படுகிறது.

நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Tomorrows Weather Forecast

எவ்வாறாயினும், நாளைய தினம் நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில்(northern province) சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். மாலை அல்லது இரவு வேளையில் மற்ற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாளையதினம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Tomorrows Weather Forecast

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.