வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது.

டிசம்பர் 15 இற்கு பின்னர், தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்கள் ஓட்ட முடியாது எனவும் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Temporary Vehicle Number Plates Valid December 15

இந்நிலையில், தற்காலிக இலக்கத் தகடுகளுடன் வாகனம் ஓட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்ட அனுமதி, இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி அன்று இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.