இலங்கைக்கு கிடைக்கவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்!

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்!

இலங்கையின் எரிசக்தி துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க அனுமதியளித்துள்ளது.

அதன்படி, 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்! | 200 Million Usd Loan Facility To Sri Lankaஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டகபூமி கடோனோ இதனை தெரிவித்துள்ளார்.

போட்டித்தன்மை கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை எளிதாக்குதல், எரிசக்தி உற்பத்தி செலவைக் குறைப்பதனை இலக்காக கொண்டு, உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த தொகை வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.