அரசியலமைப்பு பேரவை கூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

அரசியலமைப்பு பேரவை கூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு

அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் கூடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

8 வது நாடாளுமன்றின் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் குறித்த அரசியலமைப்பு பேரவையை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று பிற்பகல் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொது சேவைகள் ஆணைக்குழுவில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார்.