கிழக்கில் வாக்களிப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள தீவிர நடவடிக்கை!

கிழக்கில் வாக்களிப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள தீவிர நடவடிக்கை!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி இரசாயண திரவம் தெளிக்கப்பட்டது.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் ஆறு வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் ஏழு வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் பதினாறு வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாக்காளர்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தலை நடத்த சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளது.

இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.