
தேர்தல் பிரசார பணிகள் நிறைவு
இம் முறை பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைள் நேற்று (02) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் இன்று தொடக்கம் அமைதி காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பிரசார கூட்டங்களை நடத்துதல், வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரித்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், அலுவலகங்களில் பிரசார பதாகைகளை காட்சிப்படுத்துதல், சுவரொட்டிகள் மற்றும் அறிவித்தல்களை காட்சிப்படுத்துதல் ஆகிய தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவித்தலை மீறும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.