நாட்டில் வாகன பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து..?
எதிர்வரும் காலங்களில் நாட்டில் வாகனங்களுக்கான பற்றாக்குறை ஏற்படக்கூடுமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கம் இறக்குமதியில் மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாகவே இவ்வாறு வாகன பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் விற்பனையாகும் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் இருப்பினும் குறித்த வாகனங்கள் தற்போது நாட்டில் இல்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.