
மனைவி கொலையில் தேடப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் விவசாய காணியொன்றில் சந்தேகமான முறையில் கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் களுதாவளை 04, களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என கூறப்படுகின்றது.
சந்தேகநபர் முன்னதாக மனைவியை கொலை செய்த சம்பவத்துடன் தேடப்பட்டு வருபவர் எனவும், சில நாட்களுக்கு முன்னர் பொலிஸாரின் விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.