அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம்

அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம்

தாய்லாந்தில்  பெண்ணொருவர் பணியில் விடுமுறை கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகன் மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே என்ற 30 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம் | Young Woman Died Front Of The Manager The Office

கடந்த செப்டம்பர் 5 திகதி முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவச் சான்றிதழை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் திகதி வரை விடுமுறை எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 ஆம் திகதி விடுமுறை வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் வேண்டும் என்று அந்த பெண் கேட்டுள்ளார்.

அலுவலகத்தில் மேனேஜர் கண்முன்னே மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி சம்பவம் | Young Woman Died Front Of The Manager The Office

ஆனால் அதிக நாட்கள் விடுமுறை எடுத்து விட்டதால் இனி விடுமுறை தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த விடுமுறைக்கு மருத்துவச் சான்றிதழை கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.

வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி மேலும் ஒரு மருத்துவச் சான்றிதழ்வுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். 

தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சக ஊழியர்கள் மூலம் இச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.