விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க நேற்று (20) வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகளும், பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் சேவைகள் என்பன இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.