யாழில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! அதிர்ச்சி சம்பவம்

யாழில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் வைத்து தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! அதிர்ச்சி சம்பவம் | Husband Cut His Wife Hands Bad Relationship Jaffna

இதேவேளை, சந்தேக நபரின் ஒரு கை போரில் ஏற்பட்ட விபத்தில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! அதிர்ச்சி சம்பவம் | Husband Cut His Wife Hands Bad Relationship Jaffnaகைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி மற்றுமொரு நபருடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன்  கணவன் இது தொடர்பில் தனது மனைவிக்கு பல தடவைகள் எச்சரித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சந்தேக நபரின் மனைவி வீட்டின் அறைக்குள் இருந்து இரகசியமாக தனது கள்ளக்காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்துள்ள நிலையில் அதனை அவதானித்த கணவன் தனது மனைவியின் கையை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

யாழில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை! அதிர்ச்சி சம்பவம் | Husband Cut His Wife Hands Bad Relationship Jaffna

சம்பவத்தில் காயமடைந்த 41 வயதுடைய மனைவி தெலிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.