தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!

தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!

மாத்தறை – காலி பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையை உலுக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்! | The Shooting Incidents That Shake The Southஇதேவேளை, தெஹிவளை சரணங்கர வீதி பகுதியில் நேற்று (18) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் , தங்காலை நலகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.