வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கான விசேட அறிவிப்பு

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கான விசேட அறிவிப்பு

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று (18) முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கான விசேட அறிவிப்பு | Special Notice Regarding Voter Cardsமேலும், கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 14 ஆம் திகதி நிறைவடைந்ததாக  ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.