தமிழர் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!l

தமிழர் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருகோணமலையில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகில் வாய்க்காலில் முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (15-09-2024) காலை இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Trincomalee Three Wheeler Accident Women Injuredவிபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து குறித்த வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போது சம்பவித்துள்ளது.

தமிழர் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியபோது பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Trincomalee Three Wheeler Accident Women Injured

குறித்த சம்பவத்தில் திருகோமணமலை நகரைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.