பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமை : பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு

பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமை : பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (Human Rights Commission) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு பெவ்ரல் அமைப்பினால் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா (Nimal Punjihewa) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் (Jaffna), ருகுணு (Ruhunu) மற்றும் களனி (Kelaniya) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நாள் முழுவதும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தூரப்பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் இந்த பிரச்சினையை எதிர்நோக்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.