வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு ! | Temporary National Identity Card Issued To Voters

மேலும், தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோட்ட கண்காணிப்பாளர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.