நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை | Today Weather In Sri Lanka For Rain Strong Wind

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.