வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (01.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை! | Today Weather Tamil

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சூரியன் தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக ஓகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கப் போகிறது.

வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை! | Today Weather Tamil

இன்று (01) மதியம் 12.10 மணியளவில் ஹபரணை, ஹிகுராக்கொட, இபலோகம மற்றும் தப்போவ ஆகியவை சூரியன் தலைக்கு மேல் இருக்கும் இலங்கையின் அண்மையிலுள்ள இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.