இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி!

இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி!

வீட்டு பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி! | New Initiative Generate Electricity In Sri Lanka

திருவிழாவின் போது முன்னெடுக்கப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது பொதுவானது என்றாலும், நுவரெலியாவில் இந்த நோக்கத்திற்காகப் பட்டங்களைப் பயன்படுத்துவது ஒரு புதிய முயற்சியாகும்.

குறித்த யோசனை இலங்கைக்கு புதியது. இருப்பினும் இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு புதிய முயற்சி! | New Initiative Generate Electricity In Sri Lanka

அங்கு உயரப்பறக்கும் ஒரு பட்டத்தின் மூலம் குறைந்தது 4 வீடுகளுக்கான மின்சாரம் பெறப்படுகிறது.

 இலங்கையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு,  இலங்கை முழுவதும் உள்ள பட்டம் பறக்கவிடும் சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.

இந்த திட்டத்தின் ஊடாக 500 மீட்டருக்கு மேல் உயரத்தில் பறக்கும் பட்டங்களின் மூலம் 1,800 டெராவொட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

இதனால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்தக் கொழும்பு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகப் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.