யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியிடம் மோசமாக நடந்த சிறிய தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியிடம் மோசமாக நடந்த சிறிய தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாண பகுதியில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை கைதான மூன்று பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியிடம் மோசமாக நடந்த சிறிய தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த கதி! | Little Father Abuse Mentally Retarded Girl Jaffna

சுகவீனம் காரணமாக குறித்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவேளையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோது, தாயின் சகோதரியினது கணவர் (சித்தப்பா) மற்றும் இரண்டு இளைஞர்கள் என மூன்று பேர் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியிடம் மோசமாக நடந்த சிறிய தந்தை உட்பட மூவருக்கு நேர்ந்த கதி! | Little Father Abuse Mentally Retarded Girl Jaffna

சில தடவைகள் கூட்டு வன்புணர்வுக்கும் யுவதியை உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் யுவதியின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் மூன்று பேரையும் முற்படுத்தியதையடுத்து, சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.