பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதியிடம் இருந்து விசேட திட்டம்!
இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுப்படுத்தி வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு சிறந்த பொருளாதாரம் அமையும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோல்இவழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்க இடங்களில் உள்ள தொல்பொருள் சொத்துக்களை சேதப்படுத்த ஒருபோதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.