நிலமை மோசமாகும்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடுமையான எச்சரிக்கை!

நிலமை மோசமாகும்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடுமையான எச்சரிக்கை!

கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச்செல்லும் போது தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் எங்களுக்கு பிரச்சினையில்லை.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் வாக்களிப்பதற்கான உரிமையுள்ளது.

வாக்களிப்பின் போதும், வாக்குப்பெட்டிகளை வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போதும் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களை விசேடமான ஒரு பகுதியிலேயே வாக்களிக்கச் செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.